தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
பாலியல் குற்றவாளிகள் வசிக்க ஆடம்பர வீடுகளை கொண்ட ‘தனி’ கிராமம்!
- Get link
- X
- Other Apps
அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமம் 2009 ஆம் ஆண்டு பாஸ்டர் டெக் விடெரோ என்பவரால் உருவாக்கப்பட்டது.
- அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம்.
- கிராமத்தில் வசிப்பவர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள். ம
- நீதிமன்றம் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
உலகில் தனித்துவம் நிறைந்த பல கிராமங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மருத்துவர்கள் அதிகம் வாழும் கிராமம் அல்லது வழக்கறிஞர்கள் அதிகம் உள்ள கிராம், அல்லது விளையாட்டு வீரர்களுக்கு புகழ்பெற்ற கிராமம் என பல விதமான கிராமங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது போன்ற தகவலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது உங்களுக்கு சற்று விசித்திரமாகத் தோன்றும், ஆனால் அது உண்மைதான். பாலியல் குற்றவாளிகளுக்காகவே, அமெரிக்காவின் இந்த கிராமம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமம் 2009 ஆம் ஆண்டு பாஸ்டர் டெக் விடெரோ என்பவரால் உருவாக்கப்பட்டது. பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்று, தண்டனை காலத்தை நிறைவு செய்தவர்கள் மீண்டும் சமூகத்தில் சேரலாம் என்பதே இதன் நோக்கம். இந்த கிராமத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள் வாழ்கின்றனர்.
இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள். மற்றும் அவர்களின் பெயரை நீதிமன்றம் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. எனினும், இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், கடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
பாலியல் குற்றாவாளிகளுக்கான இந்த தனிப்பட்ட கிராமத்தில், ஒரே மாதிரியாக, ஆடம்பரமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என ஃபர்ஸ்ட் கோஸ்ட் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. புளோரிடா மாநில சட்டங்களின்படி, பாலியல் குற்றவாளிகள் பள்ளி, பூங்கா அல்லது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆயிரம் அடிக்குள் வாழ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில், குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் கூட, இந்த கிராமத்தில் குடியேறியுள்ளனர். இங்கு குடியேறியவர்களில் ஒருவரான பாட் பவர்ஸ் கூட பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்றவர். விளையாட்டு பயிற்சியின் போது மாணவர்களுடன் உடலுறவு கொண்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி. வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்...

Comments
Post a Comment