நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாலியல் குற்றவாளிகள் வசிக்க ஆடம்பர வீடுகளை கொண்ட ‘தனி’ கிராமம்!

 அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமம் 2009 ஆம் ஆண்டு பாஸ்டர் டெக் விடெரோ என்பவரால்  உருவாக்கப்பட்டது. 


  • அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம்.
  • கிராமத்தில் வசிப்பவர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள். ம
  • நீதிமன்றம் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.

உலகில் தனித்துவம் நிறைந்த பல கிராமங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மருத்துவர்கள் அதிகம் வாழும் கிராமம் அல்லது வழக்கறிஞர்கள் அதிகம் உள்ள கிராம், அல்லது விளையாட்டு வீரர்களுக்கு புகழ்பெற்ற கிராமம் என பல விதமான கிராமங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது போன்ற  தகவலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது உங்களுக்கு சற்று விசித்திரமாகத் தோன்றும், ஆனால் அது உண்மைதான். பாலியல் குற்றவாளிகளுக்காகவே, அமெரிக்காவின் இந்த கிராமம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமம் 2009 ஆம் ஆண்டு பாஸ்டர் டெக் விடெரோ என்பவரால்  உருவாக்கப்பட்டது. பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்று, தண்டனை காலத்தை  நிறைவு செய்தவர்கள் மீண்டும் சமூகத்தில் சேரலாம் என்பதே இதன் நோக்கம். இந்த கிராமத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள் வாழ்கின்றனர்.

இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள். மற்றும் அவர்களின் பெயரை நீதிமன்றம் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. எனினும், இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், கடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

பாலியல் குற்றாவாளிகளுக்கான இந்த தனிப்பட்ட கிராமத்தில், ஒரே மாதிரியாக, ஆடம்பரமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என ஃபர்ஸ்ட் கோஸ்ட் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. புளோரிடா மாநில சட்டங்களின்படி, பாலியல் குற்றவாளிகள் பள்ளி, பூங்கா அல்லது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆயிரம் அடிக்குள் வாழ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில், குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் கூட, இந்த கிராமத்தில் குடியேறியுள்ளனர். இங்கு குடியேறியவர்களில் ஒருவரான பாட் பவர்ஸ் கூட பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்றவர். விளையாட்டு பயிற்சியின் போது மாணவர்களுடன் உடலுறவு கொண்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!