தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
பாலியல் குற்றவாளிகள் வசிக்க ஆடம்பர வீடுகளை கொண்ட ‘தனி’ கிராமம்!
- Get link
- X
- Other Apps
அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமம் 2009 ஆம் ஆண்டு பாஸ்டர் டெக் விடெரோ என்பவரால் உருவாக்கப்பட்டது.
- அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம்.
- கிராமத்தில் வசிப்பவர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள். ம
- நீதிமன்றம் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
உலகில் தனித்துவம் நிறைந்த பல கிராமங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மருத்துவர்கள் அதிகம் வாழும் கிராமம் அல்லது வழக்கறிஞர்கள் அதிகம் உள்ள கிராம், அல்லது விளையாட்டு வீரர்களுக்கு புகழ்பெற்ற கிராமம் என பல விதமான கிராமங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது போன்ற தகவலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது உங்களுக்கு சற்று விசித்திரமாகத் தோன்றும், ஆனால் அது உண்மைதான். பாலியல் குற்றவாளிகளுக்காகவே, அமெரிக்காவின் இந்த கிராமம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமம் 2009 ஆம் ஆண்டு பாஸ்டர் டெக் விடெரோ என்பவரால் உருவாக்கப்பட்டது. பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்று, தண்டனை காலத்தை நிறைவு செய்தவர்கள் மீண்டும் சமூகத்தில் சேரலாம் என்பதே இதன் நோக்கம். இந்த கிராமத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள் வாழ்கின்றனர்.
இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள். மற்றும் அவர்களின் பெயரை நீதிமன்றம் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. எனினும், இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், கடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
பாலியல் குற்றாவாளிகளுக்கான இந்த தனிப்பட்ட கிராமத்தில், ஒரே மாதிரியாக, ஆடம்பரமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என ஃபர்ஸ்ட் கோஸ்ட் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. புளோரிடா மாநில சட்டங்களின்படி, பாலியல் குற்றவாளிகள் பள்ளி, பூங்கா அல்லது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆயிரம் அடிக்குள் வாழ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில், குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் கூட, இந்த கிராமத்தில் குடியேறியுள்ளனர். இங்கு குடியேறியவர்களில் ஒருவரான பாட் பவர்ஸ் கூட பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்றவர். விளையாட்டு பயிற்சியின் போது மாணவர்களுடன் உடலுறவு கொண்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பில் சலவை சோப்பு அனுப்பப்பட்டது. விண்வெளி வீரர்கள் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை விண்வெளிக்கு அனுப்பியது புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுத் தொகுப்பு அனுப்பியது. பரிசுப் பொருட்களில் சலவை சோப்பும் அனுப்பப்பட்டுள்ளது. Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை திறம்பட துவைக்க உதவுமா என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையின் ஒரு பகுதி இது . விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. விண்வெளியின் மர்மங்களைம் ரகசியங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. அங்கு அவர்கள், சாப்பிடுவது, தூங்குவது போன்ற வேலைகளை செய்வது வித்தியாசமானதாக இருக்கும். பலவிதமான காரணங்களால் விண்வெளி வீரர்கள் தங்கள் துணிகளை துவைக்க முடிவதில்லை. அவர்கள் அணிந்துள்ள துணிகளைக் துவைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியில் ஒரு பகுதியா...
Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...

Comments
Post a Comment