நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Benefits of Sleeping Naked| ட்ரெஸ் இல்லாம தூங்கினா இந்த நன்மைகளா? ஆராய்ச்சியாளர்கள் இப்படி சொல்றாங்க..

தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை அறியாதவர்களாக மாறிவருகிறார்கள் ஸ்மார்ட்ஃபோன் தலைமுறையினர்.
கல் முழுவதும் மனதுக்கும், உடலுக்கும் அவ்வளவு வேலையை கொடுத்துவிட்டு, அவை இளைப்பாற கூட நேரம் தராமல் சென்று கொண்டிருக்கிறது இந்த நாகரிக உலகம். என்ன புரியவில்லையா.. தூக்கத்தைதான் சொல்கிறேன். 

ஆகச்சிறந்த அருமருந்தான தூக்கத்தை தொடர்ந்து தவிர்த்து வருவதால் இன்று மக்கள் மாத்திரைகளின் பிடியில் சிக்கி திண்டாடி வருகின்றனர். இன்னும் சிலரோ தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர். இது ஒரு புறம் மக்கள் சென்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிறந்த மேனியாக தூங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை வெறும் 2 சதவீதத்தினர் மட்டும்தான் பிறந்த மேனியாக தூங்குவதாக ஆராய்ச்சிகள் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் 100 -இல் 40 சதவீத மக்கள் பிறந்த மேனியாக தூங்குகிறார்களாம். அதுதான் அவர்களுக்கு பிடிக்கவும் செய்கிறதாம். இது பலவித நன்மைகளை தருவதாகவும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சரி இப்ப மேட்டருக்கு வருவோம்.. இப்படி பிறந்த மேனியா தூங்குவதனால் கிடைக்கும் நன்மைகள் கீழே:-

1. இப்படி ஆடை இல்லாமல் தூங்குவதினால், நமது இரத்தம் சீக்கிரம் குளிர்ச்சியடைந்து விடும். இதனால் சீக்கிரமாக தூக்கத்திற்கு சென்றுவிட முடியும். 

2. ஆழ்ந்த தூக்கம் சொந்தமாகும். 

3. நாள் முழுவதும் ஆடை அணிந்திருப்பதால், தோலில் உள்ள செல்கள் தங்களை புதுப்பித்துக்கொள்வதில் சிரமம் ஏற்படும். ஆனால் பிறந்த மேனியாக தூங்கும் போது அது மிக சீராக நடைபெறும். இதனால் தோல் பளபளப்பாக இருக்கும். 

4. இறுக்கமான ஆடைகள் மன அழுத்தத்தை அதிகமாக கொடுக்கும். ஆனால் இப்படி தூங்குவதால் அதிகப்படியான மன அழுத்தம் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 
5. அதிக எடை கூடுவதும், இதனால் தடுக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!