நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சுருக்கம், முகப்பரு, கரும்புள்ளிகளா.. இந்த உணவுப் பட்டியல்தான் பெஸ்ட்.. ஃபாலோ பண்ணுங்க..

குளிர்காலங்களில் மட்டுமல்ல, இயல்பாகவும் தோலை பாதுகாக்க தேவையான 5 உணவுகளை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை..!
நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் நமது உடலின் ஆற்றலில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஆற்றல் ஆனது நமது உடலுறுப்புகளில் மட்டுமல்லாது நமது தோலிலும் பிரதிபலிக்கிறது. பொதுவாக நமது உடலுக்குத் தேவையான சத்தான உணவுகளை மருத்துவரின் ஆலோசனையின் படி தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், அந்த உணவு நமது உடலின் எடையை சமச்சீராக தொடர உதவுவதுடன் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. இதுமட்டுமன்றி இந்த உணவுகள் நமது முடி, தோல் ஆகியவற்றுக்கு புத்துணர்ச்சி அளித்து முடிக் கொட்டுவதை தடுத்து, பளபளப்பான தோலையும் நமக்குத் தருகிறது.

தற்போது பனிக்காலம் என்பதால் பெரும்பான்மையானோருக்கு பனியின் காரணமாக தோல் வறண்டு போய் விடும். இந்த வறட்சியை சமாளிக்க தோலில் சரியான அளவில் ஈரப்பதம் இருப்பதை பார்த்துக்கொள்ளவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் நமது தோலை பாதுகாக்க தேவையான உணவுகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 


தண்ணீர் 

உங்களுடைய டயட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது தண்ணீர். தண்ணீர் உடலிலும், தோலில் நடக்கும் நீரேற்றம் (hydration) சரிவர நடக்க உதவிபுரிகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது தோலை மெருதுவாக வைக்க உதவும். 

கொழுப்பு அமிலங்கள்: (Fatty Acids)

ஓமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இருக்ககூடிய வால்நட், மீன் வகைகள் (Salmon and Mackerel), ஆளி விதைகள் உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்ளும் போது, இதில் இருக்கும் அமிலங்கள் இயற்கையாக நமது தோலின் வறட்சியை சமன் செய்ய உதவுகிறது. 

கேரட்

கேரட்டில் பீட்டா-கரோட்டின், லைகோபீன் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது தோலை புற ஊதா கதிர்களிமிருந்து பாதுகாக்கின்றன. இதுமட்டுமன்றி கேரட்டில் இருக்கும் விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் ஆண்டி ஆக்சிடன்ஸ் தோல் பிரச்னைகளை தடுக்க உதவுகிறது. 

சிட்ரஸ் பழங்கள்: 

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, திராட்சை, டேஞ்சரின் உள்ளிட்டப் பழங்களை இந்த காலங்களில் பழச்சாறுகளாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் விட்டமின் சி சத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் தண்ணீர் நிரேற்றத்திற்கும், நார்ச்சத்து ஜீரணத்திற்கும் உதவியாக உள்ளது. 

சீனி கிழங்கு

சீனி கிழங்கில் இருக்கும் நார்சத்துகள் அடுத்த நேர உணவிற்கு அதிக நேர இடைவெளியை தருகிறது. மேலும் இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் தோலுக்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு மட்டுமல்லாமல் தோலை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. 

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!